My Blog

July 31, 2026

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை: கோவையில் மார்க்சிஸ்ட் போராட்டம்

கோவையில் நீட் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படும் 19 வயது மாணவி அனு கீர்த்தனாவுக்கு நீதி கோரி, அவரது உடலைப் பெற மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உறவினர்கள் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவரான செந்தில் பிரபுவின் மகளான அனு கீர்த்தனா, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்காக தீவிரமாகத் தயாராகி வந்தார். ஏற்கனவே பி.டி.எஸ். படிப்புக்கான இடம் பெற்றிருந்த போதிலும், எம்பிபிஎஸ் படிப்பில் சேர வேண்டும் என்ற இலக்குடன் மீண்டும் நீட் தேர்வை எழுதியிருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top